Monday, 31 March 2014

காதலிக்கிறேன் ஆனால் காதலன் யாரென்று சொல்ல மாட்டேன்! -சமந்தா

NT_140330150049000000
தெலுங்கு சினிமா வட்டாரங்களில் சித்தார்த்-சமந்தா பற்றிய காதல் செய்திகள் சில வருடங்களாகவே புகைந்து கொண்டிருக்கிறது. இதுபற்றி சித்தார்த் எதையும் வெளிப்படையாக சொல்ல மறுத்து வருகிறார்.
அப்படி தான் சொன்னால் சமந்தாவின் சினிமா கேரியர் பாதிக்கும் என்று நினைக்கிறாரோ என்னவோ, ரகசியம் காத்து வருகிறார்.
ஆனால் இந்த விசயத்தில் சமந்தா சில சமயங்களில் மனதில் உள்ளதை வெளிப்படுத்தி விடுகிறார். அப்படி அவரிடம சமீபத்தில் காதல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் காதலிப்பது உண்மைதான். ஆனால், நான் காதலிக்கும் நபரை மட்டும் இப்போதைக்கு சொல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.
அதேசமயம், எனக்கு ரொம்ப பிடித்தமானவர்கள் நடிகர் சித்தார்த் மற்றும் தெலுங்கு டைரக்டர் திரி விக்ரம்.
அதற்காக இவர்களில் ஒருவர்தான் உங்கள் காதலரா? என்று கேட்காதீர்கள்.
அதற்கு எனனிடம் பதில் இல்லை என்று கூறியுள்ள சமந்தா, இன்னும் 4 வருடங்களுக்குப் பிறகுதான் கல்யாணம் செய்து கொள்வதைப் பற்றியே யோசிப்பாராம். அதுவரைக்கும் லவ் ட்ராக் தான் ஓடிக்கொண்டிருக்குமாம்.

வாரிசுகளின் காதல்: கமல் கவலை




X
NT_140330112649000000
கமலஹாசனும், ரதியும் இணைந்து நடித்த ஏக் துஜே கேலியே 80ளில் சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்திப் படம். தமிழில் உல்லா ச பறவைகள் படத்தில் இணைந்து நடித்தனர். இப்போது இவர்களது வாரிசுகள் காதலித்து வருவதுதான் பாலிவுட்டில் லேட்டஸ்ட் பரபரப்பு
கமலஹாசனின் இளைய மகள் அக்ஷரா மும்பையில் அம்மா சரிகாவுடன் வசித்து வருகிறார். படம் இயக்கும் ஆசையில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அக்ஷரா நடிகையாகிவிட்டார். தற்போது தனுசுடன் இந்தியில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அக்ஷரா, ரதியின் மகன் தனுஜ்வில்வானியை தீவிரமாக காதலித்து வரும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தி மீடியாக்களில் இந்த செய்தி பரபரப்பாக வெளியான போதும் இதனை இருவருமே இதுவரை மறுக்கவில்லை. இருவரும் ஓட்டல், பார்ட்டி, பங்ஷன் என்று சுற்றி வருவதாக கூறப்படுகிறது.
இவர்களின் காதல் சரிகாவுக்கும், கமலுக்கும் பிடிக்கவில்லை. வளரும் நேரத்தில் காதலில் விழுந்து விட்டாளே என்ற கவலை இருவருக்குமே இருக்கிறதாம். இருவரும் அக்ஷரவை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் சரிகா ஸ்ருதிஹாசன் போன்று மென்மையானவர் கிடையாது. தன்னுடைய முடிவில் யாரும் தலையிடக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர். அதனால் அவர் தன் காதலை தொடர்ந்து கொண்டிருப்பதாக மும்பை தகவல்கள் தெரிவிக்கிறது

'ஐ' பட டிரெய்லர் எப்போது?


ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமிஜாக்சன் நடிக்கும் படம் 'ஐ'. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போகிறது. சமீபத்தில் படத்தின் புகைப்படங்கள் வெளியாகி அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும் படத்தில் விக்ரமின் கெட்டப்புகளை பற்றி நாளுக்கு நாள் வெளிவருகிற செய்திகளும் படத்தின் வெளியீட்டைப் பற்றி ஆவலை அதிகப்படுத்துகிறது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லர் ஏப்ரல் 14 அல்லது 23ல் வெளியாகப்போகிறது எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. 'ஐ' படத்தை மிக ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கும் ரசிகர்களுக்கு இந்த தகவல் கண்டிப்பாக கொண்டாட்டத்துக்கு உரியதாக இருக்கும்.

சினிமால்!


Rate this article

                       சினிமாவாகிறது ரஜினிகாந்தின் வாழ்க்கை!

கெய்க்வாட். இவரது வாழ்க்கை பற்றி புத்தகம் ஏற்கனவே வெளியாகியுள்ளது. தற்போது இவரது வாழ்க்கை இந்தி மற்றும் தமிழில் படமாகிறது.
இரு மொழிகளிலும் ஆதித்யா மேனன் ஹீரோவாக நடிக்கிறார். இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் வில்லனாக நடித்துக்கொண்டிருப்பவர். தமிழில் வில்லு, பில்லா, அசல், சிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பஸ் கண்டக்டராக இருந்து பின் சினிமாவிற்குள் நுழைந்தது, சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தது, ஆன்மீகத்தில் ஈடுபாடுகாட்டியது என ரஜினியின் வாழ்க்கை மொத்தமும் பதிவு செய்யப்பட இருக்கிரதாம்.
ரஜினி வேடத்தில் நடிப்பது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என கூறியிருக்கிறார் இப்படத்தின் ஹீரோ ஆதித்யா மேனன்.
இப்படத்திற்கு ஹிந்தியில் 'மை ஹோ ரஜினிகாந்த்' என்றும், தமிழில் 'நானே ரஜினிகாந்த்' என்றும் தலைப்பிடப்பட்டுள்ளதாம். படத்தினை ஃபைசல் பை என்பவர் இயக்குகிறார், வர்ஷா புரொடக்‌ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தணிக்கைக்குழு நெருக்கடி! குழப்பத்தில் விஷால்!

விஷால், லட்சுமி மேனன், இனியா, சுந்தர், ஜெகன் நடிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் 'நான் சிகப்பு மனிதன்'. இப்படம் ஏப்ரல் 11ம் தேதி திரைக்குவருகிறது.
இந்த சமயத்தில் படத்திற்கு சிக்கல் வந்துள்ளது. தணிக்கைக் குழுவினர் படத்தைப் பார்த்துவிட்டு, படத்தில் வரும் முத்தக் காட்சியை நீக்கும்படி சொல்லியிருக்கிறது.
அது படத்திற்கு முக்கியமான காட்சி என விஷால் தரப்பு கூற, முத்தக்கட்சியை நீக்கினால் தான் 'யூ' சான்றிதழ் வழங்குவோம் இல்லை எனில் 'யூ/ஏ' சான்றிதழ் தான் வழங்கப்படும் எனத் தணிக்கைக்குழு  தெரிவித்திருக்கிறது.
முத்தக்காட்சியை நீக்கிவிட்டு 'யூ' சான்றிதழ் பெறுவதா, இல்லை நீக்காமல் 'யூ/ஏ' சான்றிதழ் பெற்றுக்கொள்வதா என குழப்பத்தில் இருக்கிறதாம் விஷால் தரப்பு.

விபசாரத்திற்கு அழைப்பு விடுத்த நடிகை ரகசிய கேமராவில் சிக்கிய காட்சி!. - நாடு உருப்புடுமா ?