சித்தர்கள் எங்கே?
சித்தர்கள் இன்னமும் இருக்கிறார்களா?
சித்தர்கள் இன்னமும் இருக்கிறார்களா?
சித்தர்கள் நேற்று இருந்தார்கள் என்றால் இன்றும் இருப்பார்கள். நாளையும் இருப்பார்கள். சித்தர்கள் என்றாலே காவி ஆடையும், நீண்ட தாடியுமாகத் தேடவேண்டாம். சுயநலம் இல்லாமல் பிறருக்கு உதவுபவர்கள் எல்லோருமே சித்தர்கள்தான்.
சமாதியில் இருக்கிறாரா சித்தர்?
ஐயா... நான் மாதத்தில் சில நாட்களை சித்தர்களின் ஜீவ சமாதிக்குச் சென்று தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அகத்தியர் முக்தி அடைந்ததாக சில இடங்களைச் சொல்கிறார்கள். அதே போல் பதஞ்சலி முனிவருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சமாதிகள் இருக்கின்றன. இவற்றில் எது உண்மையானது என்று தெரியாமல் குழம்பிப் போகிறேன். தவறான இடங்களுக்குச் செல்லாமல் இருக்க ஒரு வழி காட்டுங்களேன்?
இந்த உலகில் முக்தி அடைந்த சித்தர்களை எண்ணிகையில் அடக்க இயலாது. அதனால் ஒரே பெயரில் பல சித்தர்கள் இருப்பதும் அவர்களுக்காக பல்வேறு இடங்களில் சமாதி இருப்பதும் சகஜம்தான். மலையையும், காற்றையும், கடலையும் கடவுளாக வணங்குவது நம் மரபு. இதில் சாதிபேதம் பார்க்க வேண்டியது இல்லை. அதனால் எல்லா சமாதிகளையும் சித்தர்கள் சமாதி என்றே வணங்கு. சந்தேகக் கண்ணுடன் எதையுமே பூஜிப்பதை விட, சும்மா கிட.
மனிதர்களிடம் இருந்து உடனடியாக பிரிக்கவேண்டியது எது சாதியா... மதமா?
சந்தேகம் இல்லாமல் சாதிதான். உடல் அமைப்பு காரணமாக நீ ஆண் அல்லது பெண் என்று பிரிந்து இருக்கிறாய். வாழும் இடத்தைப் பொறுத்து வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவனாக இருக்கிறாய். பேசும் மொழியைப் பொறுத்து வெவ்வேறு இனத்தவனாக இருக்கிறாய். வணங்கும் ஆண்டவனை முன்னிட்டு வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவனாக இருக்கிறாய். ஆனால் என்ன காரணத்துக்காக சாதி உருவானது... ஏன் பிரிந்து நிற்கவேண்டும் என்று யோசியுங்கள். காரணமே இல்லாத சாதியை இன்னமும் விரட்டாமல் இருப்பதுதான் மனிதகுலம் செய்யும் மாபாதகம்.
நண்பர்கள் மீது மிகவும் பிரியமாக இருக்கிறேன். ஆனால், அவர்கள் என்னிடம் பணம் தவிர வேறு எதையும் எதிர்பார்ப்பதாகத் தெரியவில்லை. துரியோதனன் - கர்ணன் போன்று நட்போடு இருப்பதெல்லாம் இதிகாசத்தில் மட்டும்தான் சாத்தியமா?
நெஞ்சில் குத்துபவனே நல்ல நண்பன். கர்ணன் நல்ல விசுவாசியே தவிர, சிறந்த நண்பன் அல்ல. பாஞ்சாலியின் சேலை உரியப்பட்ட தருணத்தில் தடுத்து இருந்தால், பஞ்ச பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்களாவது தர துரியோதனை சம்மதிக்க வைத்திருந்தால்தான், அவன் நல்ல நண்பன்.
குருஷேத்திரப் போரில் கர்ணனுக்கு சல்லியன் சிறந்த நண்பனாக இருந்தான். நாகாஸ்திரத்தை அர்ஜுனனின் நெஞ்சுக்கு குறி வைக்கச் சொன்னான், அதுதான் வெற்றிக்கு வழி என்று எடுத்துச் சொன்னான். ஆனால், கர்ணன் அதை அலட்சியப்படுத்தியதால் குறி தவறியது. இனி வெற்றி கிட்டாது என்பது தெரிந்ததும் போரில் இருந்து வெளியேறினான் சல்லியன். உங்கள் நெஞ்சில் குத்துபவர்கள் உடன் இருந்தால், அவர்கள் நட்பைப் பேணுங்கள். உங்களைப் பாராட்டிக்கொண்டும் புகழ்ந்துகொண்டும் இருப்பவர்களுக்குத் தேவை பணம், நட்பு அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
ஒளிவட்டம்
முகத்தில் தேஜஸ் தோன்றுவதற்கு என்ன செய்யவேண்டும்?
முகத்தில் தேஜஸ் தோன்றுவதற்கு என்ன செய்யவேண்டும்?
குழந்தையாக மாறு.
நல்ல வழி
நான் நல்ல வழியில் செல்கிறேன் என்பதை எப்படி அறிந்துகொள்வது?
நான் நல்ல வழியில் செல்கிறேன் என்பதை எப்படி அறிந்துகொள்வது?
நல்ல வழி என்பது இல்லவே இல்லை. நல்ல பாதை என்று சிலர் சொல்வதை நம்பி ஒரு வழியில் செல்ல முயற்சிக்கிறாய். அந்த சிலருக்கும் அந்த வழி நல்லதென்று வேறு யாரோ சொன்னதுதான். ஆக, யாருமே புது வழியில் செல்வதற்கு விரும்புவதில்லை. வேறு யாரோ அவரது வசதிக்காக போட்டுவைத்த வழி உனக்கு நல்லதாக எப்படி இருக்கமுடியும்? உனக்கென்று ஒரு வழி, தனி வழியில் செல்.
நிம்மதி கிடைக்குமா?
நிம்மதியாக வாழ ஆசைப்படுகிறேன். எங்கே கிடைக்கும் நிம்மதி?
நிம்மதியாக வாழ ஆசைப்படுகிறேன். எங்கே கிடைக்கும் நிம்மதி?
நிம்மதி கடையில் கிடைக்கும் பொருள் அல்ல. நிம்மதியாக வாழ்வதாகச் சொல்லும் ம்னிதன் இன்னமும் பிறக்கவே இல்லை. பிறக்காத மனிதன் மட்டும்தான் நிம்மதியாக இருக்கமுடியும். கஷ்டப்பட்டு படித்து, வேலைக்கு அலைந்து, பணத்தைத் தேடி, அதிகாரிகளுக்கு சேவகம் செய்து, குடும்பத்துடன் மல்லுக்கட்டி, முதுமையில் லோல்படும் மனித வாழ்க்கை உன்னுடைய சந்ததிக்கும் தேவைதானா..? நிறைய பணம், சொத்து, அதிகாரம் இருந்தாலும் நிம்மதி கிடைத்துவிடாது. அதனால் உனக்குக் கிடைக்காத நிம்மதி உன் சந்ததிக்காவது கிடைக்க ஆசைப்பட்டால்... குழந்தை பெற்றுக்கொள்ளாதே...
மனிதன் இல்லையென்றால் மரம், செடி, பறவை, விலங்குகளாவது நிம்மதியாக இருக்கும்.
அதெப்படி... உயிர் வாழ்தலும் இனப்பெருக்கமும்தானே வாழ்க்கையின் அடிப்படை தத்துவம் என்றுதான் சொல்வாய். உனக்கு வரும் சிக்கல்களையும் பிரச்னைகளையும் நேசிக்கப்பழகு. நிம்மதியைக் கண்டடைவாய்.
நன்றி வாழ்க வளமுடன்அதெப்படி... உயிர் வாழ்தலும் இனப்பெருக்கமும்தானே வாழ்க்கையின் அடிப்படை தத்துவம் என்றுதான் சொல்வாய். உனக்கு வரும் சிக்கல்களையும் பிரச்னைகளையும் நேசிக்கப்பழகு. நிம்மதியைக் கண்டடைவாய்.

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.
இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.
எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.
இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.
தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான். பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.
இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.
சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!
நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து.
இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம் மறைந்தது.
விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.
ஜென் கதைகள் என்றால் உங்களுக்கு பிடிக்குமே என்று தோன்றியது அதனால் ஒரு
ஜென் கதை சொல்கிறேன்
ஊருக்கு வெளியே உள்ள மலை அடிவாரத்தில் ஒரு ஜென் ஞானி தங்கி இருந்தார் அவர்
எந்த அரச மரத்துக்கு கீழோ இல்லை வில்வ மரத்துக்கு கீழோ இருக்கவில்லை ஒரு
பட்டுப்போன பூவரசு மரத்தின் கீழிருந்தார்
சதா தியானத்தில் தினம் தன் வாழ்க்கையை கழிக்கலானார்.
ஊரில் திடீரென்று பஞ்சம் ஏற்படவே சிலர் ஜென் ஞானியிடம் ஓடி வந்தனர். ஊரில் பஞ்சம் வந்த போதும் அவர் ஏதோ நல்ல உடல் ஆரோக்கியதுடனே இருந்தார். இது எப்படி என்று
வந்தவர்களுக்கு புரியவில்லை.
ஊரிலோ பஞ்சம் இவர் தோட்டத்திலோ ஆப்பிள் செரி பழங்கள் என எல்லாமே சோலையாக பூத்தும் காய்த்தும் கனிந்தும் இருந்தது.
பசியால் வந்தவர்களிடம் மௌனியாக இருந்து தன் ஆள்காட்டி விரலை சோலையை நோக்கி காட்டினார். ஓ ஞானி பழங்களை பறித்து உண்ண சொல்கிறார் என்று ஓடிப்போய்
எல்லாவற்றையும் பறித்து உண்டனர். இருந்தும் யாருக்கும் பசி அடங்கவில்லை.
அதில் ஒருவன் மட்டும் எந்தப் பழத்தையும் பறிக்காமல் ஞானியிடம் ஓடி வந்தான். ஞானியே அது எப்படி பழங்களை சாப்பிட்டவர்களுக்கு பசியே அடங்கவில்லையே அது
ஏன் என்று கேட்டான்.
அதற்கு ஞானி சொன்னார்.
அந்த மரத்தில் உள்ள கனிகள் எல்லாம் உலக போகங்கள் , இச்சைகள் அதை உண்பவருக்கு நிச்சயம் மீண்டும் பசியெடுக்கும் ஆனால் எப்பொழுது நீ அதை தொடாமல்
இருந்தாயோ அப்பொழுதே நீயும் என்னைப் போல ஞானியகிவிட்டாய் இனி உனக்கு
பசி என்பதே இருக்காது என்றார் .
உன்னை நீ அறிந்து விட்டால் உலகத்தின் போகத்தில் இனி தேவை இருக்காது இல்லாத
ஒன்றிலே இருக்கும் சூட்சுமத்தில்தான் இறை ஜோதியின் அருளும் கருணையும் ஒட்டியிருக்கிறது.
என்னைப் பார் என்னிடம் சொத்தாக உள்ளேயும் வெளியேயும் ஒன்றுமில்லை ஆனால்
என்னால் உலகத்திலுள்ள எதையுமே அடைந்து விட முடியும். இனி இந்த ஊருக்கு நான்
தேவைப்படாத பொருள்
நீ ஞானம் பெற்றதனால் நீயே இனி இந்த ஊரை கவனித்துக்கொள் என்று வந்த காரியம்
இனிதே நிறைவுற்ற திருப்தியில் ஞானி காற்றில் கரைந்தார்.
இடம் காலம் சூழ்நிலை தக்க சமயத்தில் கேட்ட கேள்வியும் யாரையும் பின்பற்றா நிலையும்
ஒருவனை கடவுளுக்கு மேல் ஆக்கும் வித்தையை ஞானியிடம் உணர்ந்து நின்மதியோடு ஊருக்கு புறப்பட்டான் இளைஞன்.
முக நூலில் என் நண்பர் பதிவிட்ட ஒரு கதையை பதிவிட விரும்புகிறேன் படித்து பயன் பெறுங்கள்
குரு வம்சம் – குருக்ஷேத்திர போருக்கு பின் – பகுதி 1
========================================
========================================
இனிய காலை வணக்கங்கள் நண்பர்களே. மீண்டும் ஒரு முறை என் எழுத்துக்கள் மூலம் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். எனது கடந்த பதிவான குருக்ஷேத்திர போரின் தொடர்ச்சியாக, போருக்கு பின் நடந்த நிகழ்சிகளை “குரு வம்சம் – குருக்ஷேத்திர போருக்கு பின்” என்ற தலைப்பில் தினம் ஒரு பகுதியாக இங்கு பதிக்கின்றேன். அதற்கு முன் மகாபாரதத்தின் பர்வங்களை பற்றி சிறு முன்னுரையை பார்ப்போம்....
மஹாபாரதம், இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இலியட், ஒடிஸ்சி ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய தெய்வீக நகைச்சுவை (Divine Comedy ) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் நீளமானது. ஒரு லட்சத்திற்கும் மேலான சுலோகங்களையும், 18 லட்சத்திற்கும் மேலான வார்த்தைகளையும், 74000 திற்கும் மேற்பட்ட பாடல்களையும், நீண்ட நெடும் உரைநடை பகுதிகளையும் கொண்டது. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த மாபெரும் காப்பியத்தை 18 பர்வங்களாகவும் 98 துணை பர்வங்களாகவும் நமக்கு பிரித்து வழங்கியுள்ளார் வியாசர்.
பாரதத்தை எப்படி உலகுக்கு அளிப்பது என வியாசர் சிந்தித்தார். பிரம்மனை தியானித்தார். பிரம்மன் நேரில் காட்சிக் கொடுத்ததும், அவரிடம் 'பகவானே.. இதை எழுதுகிறவர் பூமியில் யாரும் இல்லையே!' என்றார். பிரம்மனும் 'உம்முடைய நூலை எழுத கணபதியை தியானம் செய்யவும்' என்று கூறிச் சென்றார். வியாசர் கணபதியை தியானிக்க, கணபதி தோன்றினார். வியாசர் அவரிடம். “ பாரதத்தை நான் சொல்லச் சொல்ல நீர் எழுத வேண்டும்" என்ற வேண்டுகோளை வைத்தார்.
வினாயகரும் ஒப்புக்கொண்டு 'சரி, ஆனால் நான் எழுதும் போது என் எழுதுகோல் நிற்காது. எழுதிக்கொண்டே போகும். இதற்கு சம்மதித்தால் எழுதுகிறேன்' என்றார். இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்ட வியாசர் ' பொருளை உணர்ந்துக் கொண்டுதான் நீர் எழுத வேண்டும்' என்றார். வினாயகரும் சம்மதிக்க, வியாசர் சொல்ல ஆரம்பித்தார். ஆங்காங்கு பொருள் விளங்காமல் முடிச்சுகளை வைத்து அவர் சொல்லிக் கொண்டு போக, பொருள் அறிய கணேசன் தயங்கிய நேரத்தில் மற்ற ஸ்லோகங்களை மனதில் கொண்டு வந்து வியாசர் சொன்னார்.....
மகாபாரதத்தின் 18 பர்வங்கள்:
ஆதி பர்வம்: 1-19. நைமிசக் காட்டில் முனிவர்களுக்கு சௌதி மகாபாரதத்தைச் சொல்லியது பற்றியும், வைசம்பாயனரால் முன்னர் இக்கதை சனமேசயனுக்குச் சொல்லப்பட்டது பற்றியும் இந்த பர்வத்தில் விளக்கப்படுகிறது. பரத இனத்தின் வரலாறு பற்றி விளக்கமாகக் கூறும் இப்பர்வம், பிருகு இனத்தின் வரலாற்றையும் கூறுகிறது. குரு இளவரசர்களின் பிறப்பு, அவர்களது இளமைக்காலம் என்பனவும் இப் பர்வத்தில் கூறப்படுகிறது.
சபா பர்வம்: 20 - 28 . இந்திரப்பிரஸ்தத்தில் மயன் மாளிகை அமைத்தல், அரண்மனை வாழ்க்கை, தருமன் இராஜசூய யாகம் செய்தல் என்பன இப்பர்வத்தில் சொல்லப்படுகின்றன. அத்துடன், தருமன் சூதுவிளையாட்டில் ஈடுபட்டு இறுதியில் நாடிழந்து காட்டில் வாழச் செல்வதும் இப் பர்வத்தில் அடங்குகின்றன.
ஆரண்யக பர்வம்: 29 - 44. இது பாண்டவர்களின் 12 ஆண்டுக்காலக் காட்டு வாழ்கை பற்றிய விபரங்களைத் தருகிறது.
விராட பர்வம்: 45 - 48 பாண்டவர்கள் விராட நாட்டில் மறைந்து வாழ்ந்த ஓராண்டு கால நிகழ்வுகளைக் கூறுவது.
உத்யோக பர்வம்: 49 - 59. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே அமைதி ஏற்படுத்த எடுத்த முயற்சிகளையும், அம்முயற்சிகள் தோல்வியுற்ற பின்னர் இடம்பெற்ற போருக்கான நடவடிக்கைகள் பற்றியும் கூறுவது.
பீஷ்ம பர்வம்: 60 - 64. பீஷ்மர் கௌரவர்களின் தளபதியாக இருந்து நடத்திய போரின் முதற்பகுதியையும், அவர் அம்புப் படுக்கையில் விழுவதையும் இது விவரிக்கிறது.
துரோண பர்வம்: 65 – 72. துரோணரின் தலைமையில் போர் தொடர்வதை இப்பர்வம் விவரிக்கின்றது. போரைப் பொறுத்தவரை இதுவே முக்கியமான பர்வமாகும். இரு பக்கங்களையும் சேர்ந்த பெரிய வீரர்கள் பலர் இப் பர்வத்தின் முடிவில் இறந்துவிடுகின்றனர்.
கர்ண பர்வம்: 73 ஆம் துணைப் பர்வத்தை மட்டும் கொண்ட இப் பர்வத்தில் கர்ணனைத் தளபதியாகக் கொண்டு போர் தொடர்வது விவரிக்கப்படுகின்றது.
சல்லிய பர்வம்: 74 - 77. சல்லியனைத் தளபதியாகக் கொண்டு இடம் பெற்ற இறுதிநாள் போர் இப்பர்வத்தில் கூறப்படுகின்றது. இதில் சரஸ்வதி நதிக்கரையில் பலராமனின் யாத்திரையையும், போரில் துரியோதனனுக்கும், வீமனுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிப் போரும் விளக்கப்படுகின்றது. வீமன் தனது கதாயுதத்தால் துரியோதனனின் தொடையில் அடித்து அவனைக் கொன்றான்.
சௌப்திக பர்வம்: 78 - 80. அசுவத்தாமனும், கிருபனும், கிருதவர்மனும், போரில் எஞ்சிய பாண்டவப் படைகளில் பலரை அவர்கள் தூக்கத்தில் இருந்தபோது கொன்றது, அசுவதாமனின் சாபம், பரிக்க்ஷிட் என்னும் கருவை கிருஷ்ணர் காப்பாற்றுவது பற்றி இப்பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.
ஸ்திரீ பர்வம்: 81 - 85. இப் பர்வத்தில் காந்தாரி, குந்தி முதலிய குரு மற்றும் பாண்டவர் பக்கங்களைச் சேர்ந்த பெண்கள் துயரப் படுவது கூறப்படுகின்றது.
சாந்தி பர்வம்: 86 - 88. அஸ்தினாபுரத்தின் அரசனாகத் தருமருக்கு முடிசூட்டுவதும், புதிய அரசனுக்கு சமூகம், பொருளியல், அரசியல் ஆகியவை தொடர்பில் பீஷ்மர் வழங்கிய அறிவுரைகளும் இப் பர்வத்தில் அடங்கியுள்ளன. மகாபாரதத்தின் மிகவும் நீளமான பர்வம் இது.
அனுசாசன பர்வம்: 89, 90 ஆகிய இரண்டு துணைப் பர்வங்களை அடக்கியது. பீஷ்மரின் இறுதி அறிவுரைகள்.
அசுவமேதிக பர்வம்: தருமர் அசுவமேத யாகம் செய்வதையும், அருச்சுனன் உலகைக் கைப்பற்றுவதையும் இது உள்ளடக்குகிறது. கண்ணனால் அருச்சுனனுக்குச் சொல்லப்பட்ட கீதையும் இதில் அடங்குகிறது.
ஆஸ்ரமவாசிக பர்வம்: 93 - 95. திருதராட்டிரன், காந்தாரி, குந்தி ஆகியோர் இமயமலையில் ஆச்சிரமத்தில் வாழ்ந்தபோது காட்டுத் தீக்கு இரையானது இப் பர்வத்தில் கூறப்படுகின்றது.
மௌசால பர்வம் : 96 ஆவது துணைப் பர்வம். யாதவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திய சண்டையில் அவர்கள் அழிந்துபோனதை இப் பர்வம் கூறுகிறது.
மகாபிரஸ்தானிக பர்வம்: 97 ஆவது பர்வம்: தருமரும் அவரது உடன்பிறந்தோரும் நாடுமுழுதும் பயணம் செய்து இறுதியில் இமயமலைக்குச் சென்றது, அங்கே தருமர் தவிர்ந்த ஏனையோர் இறந்து வீழ்வது ஆகிய நிகழ்ச்சிகள் இப் பர்வத்தில் இடம்பெறுகின்றன.
சுவர்க்காரோகண பர்வம்: 98 ஆவது துணைப் பர்வம். தருமரின் இறுதிப் பரீட்சையும், பாண்டவர்கள் சுவர்க்கம் செல்வதும் இதில் சொல்லப்படுகின்றன.
99, 100 ஆகிய துணைப் பர்வங்களை உள்ளடக்கிய அரிவம்ச பர்வம் எனப்படும் பர்வம் முற் கூறிய 18 பர்வங்களுள் அடங்குவதில்லை. இதில் முன் பர்வங்களில் கூறப்படாத, கண்ணனின் வாழ்க்கை நிகழ்வுகள் கூறப்படுகின்றன.
பீஷ்ம பர்வம், துரோண பர்வம், கர்ண பர்வம், சல்லிய பர்வம், சௌப்திக பர்வம், ஸ்திரீ பர்வம் போன்றவற்றை ஏற்கனவே குருக்ஷேர்த்ரத்தில் கடந்து விட்டோம்.
“குருக்ஷேத்திர போர்” என்னும் என் முந்தைய பதிப்பை, பாண்டவர்களின் வெற்றி, நூறு கௌரவர்களின் இறப்பு, பரந்தாமனுக்கு காந்தாரியின் சாபம், அசுவதாமனுக்கு ஏற்பட்ட சாபமும் அதன் காரணமும், பரீக்ஷித் பிறப்பு, அனைத்திலும் கிருஷ்ணனின் லீலைகள், பிதாமரின் அம்பு படுக்கை நிலை என்ற நிலையில் முடித்திருந்தேன். மீண்டும் அங்கிருந்தே தொடர்வோம்...
இனி சாந்தி பர்வம் :
போரில் வெற்றி பெற்றாலும் தருமர் இழப்புகளை கண்டு மிகவும் மனம் நொந்தார். ராஜ்யத்தை விட்டு, உண்ணா நோன்பு மேற்கொண்டு, துறவு வாழ்க்கை மேற்கொள்ள துணிந்தார். தடுத்த அனைவரிடமும் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தருமரை சமாதானம் செய்ய அனைவரும் சிரமப்பட்டனர்.
தருமரின் முடி சூட்டு விழா.
பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி, வியாசர், கண்ணன், நாரதர், வியாசர், தேவ ரிஷிகள், ஆகியோரின் இடைவிடா அறிவுரைகளால் தருமர் துக்கத்திலிருந்து விடுபட்டார். தருமரின் முகத்தில் சோகம் அகன்று சாந்தம் தவழ்ந்தது. அவர் அஸ்தினாபுரம் செல்லப் புறப்பட்டார். பதினாறு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறினார். பீமன் தேரைச் செலுத்தினான். அர்ச்சுனன் வெண் கொற்றக் குடை பிடித்தான். நகுல, சகாதேவன் இருவரும் வெண் சாமரம் வீசினர். சகோதரர்கள் ஐவரும் ஒரு தேரில் செல்லும் காட்சி பஞ்ச பூதங்களையும் ஒரு சேரக் காண்பது போல இருந்தது. கண்ணனும், சாத்யகியும் ஒரு தேரில் சென்றனர். திருதிராட்டிரன் காந்தாரியுடன் ஒரு தேரில் ஏறிப் பின் தொடர்ந்தான். குந்தி, திரௌபதி, சுபத்திரை முதலானோர் விதுரரைத் தொடர்ந்து பலவித வாகனங்களில் சென்றனர். அலங்கரிக்கப்பட்ட யானைகளும், குதிரைகளும் தொடர்ந்து சென்றன. அலை அலையாகத் தொடர்ந்து சென்ற மக்கள் கூட்டம் கடலே எழுந்தது போல இருந்தது.
அஸ்தினாபுரத்து மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். நகரை நன்கு அலங்கரித்தனர். நகரம் கோலாகலமாகத் திகழ்ந்தது. தெருவெங்கும் மாலைகளும், தோரணங்களும் காட்சியளித்தன. சந்தனமும், கஸ்தூரியும் மலர் மாலைகளும் மணம் வீசி அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தின. 'எங்கள் மாமன்னர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்க' என்னும் வாழ்த்தொலிகளுக்கிடையே தருமர் அஸ்தினாபுரம் அடைந்தார்.
தருமர் உயர்ந்த பொற் பீடத்தில் கிழக்கு முகமாக அமர்ந்தார். அவருக்கு எதிரே அழகு மிக்க பொற் பீடத்தில் கண்ணன் அமர்ந்தார் .தருமர் நடுவில் இருக்க, பின்புறம் இருந்த பீடங்களில் பீமனும், அர்ச்சுனனும் அமர்ந்தனர். அழகான இருக்கையில் நகுலன், சகாதேவன், குந்தி ஆகியோர் அமர்ந்தனர். திருதிராட்டிரன் முதலான மற்றவர்கள் அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். தருமர் அருகில் திரௌபதியை அமரவைத்துத் தௌமியர் விதிப்படி ஓமம் செய்தார். கண்ணன் புனித கங்கை நீரால் தருமருக்கு அபிஷேகம் செய்து முடி சூட்டினார். எங்கும் துந்துபி முதலான மங்கள வாத்தியங்கள் முழங்கின. அந்தணர்கள் வாழ்த்தினர்.
தருமர் அவையினரை நோக்கி ' அவையோரே, எங்களது பெரிய தந்தை திருதிராட்டிர மாமன்னர் எங்களுக்கு தெய்வம் போன்றவர். என் நன்மையை விரும்பும் அனைவரும் அவரையும் போற்றுதல் வேண்டும்.உங்களுக்கும், எங்களுக்கும் அவரே அரசர். நீங்கள் அவருக்குச் செய்யும் நன்மையே எனக்குச் செய்யும் நன்மையாகும். எனது இந்த விருப்பத்தை நீங்கள் எப்போதும் மனதில் கொள்ளவேண்டும்.' என்று கூறினார். பிறகு அனைவரையும் அவரவர் இடத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
பின்னர் அரசியல் காரியம் தொடங்கியது. தருமர், பீமனுக்கு இளவரசு பட்டம் சூட்டினார். விதுரரை ஆலோசனைக் குழுத் தலைவராக நியமித்தார். சஞ்சயனை வரவு செலவுகளைக் கவனிக்கும் பதவியில் அமர்த்தினார். அர்ச்சுனனை படைத் தளபதியாக இருக்கச் செய்தார். நகுலனை படைகளைக் கவனிக்குமாறு கட்டளையிட்டார். சகாதேவனை எப்போதும் தன் அருகில் இருக்கப் பணித்தார். அரச புரோகிதராகத் தௌமியர் நியமிக்கப் பட்டார். பெரிய தந்தையைக் கண்ணும் கருத்துமாக அனைவரும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் வற்புறுத்தினார்.
தருமர் குருக்ஷேத்திர வெற்றிக்குக் காரணமாக இருந்த கண்ணனைக் கை கூப்பித் தொழுதார். கண்ணனை நூறு நாமங்களால் போற்றிப் புகழ்ந்தார். 'யதுகுலத் திலகமே..உம் அருளால் இந்த அரசு எனக்குக் கிடைத்தது. உலகம் உம் அருள் பார்வையால் நிலை பெற்றுள்ளது. உமக்குப் பலகோடி வணக்கம்' எனப் பணிவுடன் வணங்கினார்.
பின், துரியோதனின் மாளிகையைப் பீமனுக்கு வழங்கினார். துச்சாதனனின் மாளிகையை அர்ச்சுனனுக்கு அளித்தார். துர்மர்ஷனுடைய மாளிகையை நகுலனுக்கும், துர்முகனுடைய மாளிகையைச் சகாதேவனுக்கும் கொடுத்தார். ' என் அன்பு தம்பிகளே! என் பொருட்டு நீங்கள் இதுவரை எல்லையற்ற துன்பத்தை ஏற்றீர். இனி இன்பத்துடன் வாழ்வீர்' என்றார். பின், குடிமக்களை அழைத்து அறநெறியில் உறுதியாய் இருக்குமாறு கூறினார். இவ்வாறு நல்லாட்சிக்கு தருமர் அடித்தளம் இட்டார்.
இருப்பினும் தன் தாத்தா வாகிய பிதாமகரை அவரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை..... அவரால் மட்டும் அல்ல அவரின் தம்பிகளுக்கும் தான். பீஷ்மரால் இன்னும் ஒரு காரியம் நடக்க வேண்டும் என்பது கிருஷ்ணனின் விருப்பம்... மாய கண்ணன் தன் லீலையை மீண்டும் அரங்கேற்றினான்...
நாளை மீண்டும் தொடர்வோம்.............. பீஷ்மருக்காக காத்திருங்கள்.

பரதனுக்கு இராமர் சொன்ன அழியா உண்மைகள்!
அயோத்திக்குத் திரும்பி ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று ராமரை பரதன்
மீண்டும் மீண்டும் வற்புறுத்துகிறான். அவனுக்கு ராமர் சில அழகான
கருத்துக்களைக் கூறுகிறார். ராமகீதை என்று அழைக்கப்படும் இக் கருத்துகள்
வருமாறு:
ஈஸ்வரனுக்கு உள்ள சுதந்திரம் இந்த ஜீவனுக்குக் கிடையாது. ஆகவே இங்கு யாரும்
அவர்கள் இஷ்டப்படி நடக்க முடியாது. காலம் மனிதனை அங்கும் இங்கும் இழுத்துச்
செல்லுகிறது. சேர்த்து வைக்கப்படும் பொருளுக்கு முடிவு அழிவுதான். லௌகிக
உன்னதத்தின் முடிவு வீழ்ச்சிதான். கூடுவதின் முடிவு பிரிவு தான். எப்படி பழுத்த பழம்
கீழே விழுந்துதான் ஆக வேண்டுமோ, அதேமாதிரி, பிறந்த மனிதன் இறந்துதான்
ஆகவேண்டும். மூப்பு, மரணம் இவற்றுக்கு உட்பட்டு அழிந்துதான் ஆக வேண்டும்.
கழிந்த இரவு திரும்ப வராது. யமுனை நீர் கடலை நோக்கிச் செல்லும், ஆனால்
திரும்பாது. பகலும், இரவும் மாறி மாறி கழிகின்றன. கூடவே மனிதனுடைய ஆயுள்
வேகமாக அழிந்து கொண்டிருக்கிறது. மரணம் எப்பொழுதும் மனிதன் கூடவே
இருக்கிறது. மனிதன் கூடவே செல்கிறது. சூரியோதயத்தைக் கண்டு மனிதன்
மகிழ்கிறான். ஆனால் ஒவ்வொரு சூரியோதயத்தோடும் தன் ஆயுள் கழிந்து
கொண்டிருக்கிறது என்பதை மறக்கிறான். கடலில் மிதக்கும் இரண்டு கட்டைகள்
ஒன்றோடொன்று சிறிது காலம் சேர்ந்து இருக்கின்றன. பிறகு பிரிந்து ஒவ்வொன்றும்
ஒரு பக்கம் செல்கிறது. அதே மாதிரி மனிதனோடு, மனைவி, மக்கள், குடும்பம்,
பணம் எல்லாம் சேர்கின்றன. பிறகு பிரிந்து விடுகின்றன. அதனால் நாமெல்லோரும்
நம் ஆத்மாவின் நன்மையைக் கோர வேண்டும். அதற்கு எப்பொழுதும் தர்மத்தைக்
கடைப்பிடிக்க வேண்டும்
No comments:
Post a Comment