Monday, 31 March 2014

வாரிசுகளின் காதல்: கமல் கவலை




X
NT_140330112649000000
கமலஹாசனும், ரதியும் இணைந்து நடித்த ஏக் துஜே கேலியே 80ளில் சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்திப் படம். தமிழில் உல்லா ச பறவைகள் படத்தில் இணைந்து நடித்தனர். இப்போது இவர்களது வாரிசுகள் காதலித்து வருவதுதான் பாலிவுட்டில் லேட்டஸ்ட் பரபரப்பு
கமலஹாசனின் இளைய மகள் அக்ஷரா மும்பையில் அம்மா சரிகாவுடன் வசித்து வருகிறார். படம் இயக்கும் ஆசையில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அக்ஷரா நடிகையாகிவிட்டார். தற்போது தனுசுடன் இந்தியில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அக்ஷரா, ரதியின் மகன் தனுஜ்வில்வானியை தீவிரமாக காதலித்து வரும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தி மீடியாக்களில் இந்த செய்தி பரபரப்பாக வெளியான போதும் இதனை இருவருமே இதுவரை மறுக்கவில்லை. இருவரும் ஓட்டல், பார்ட்டி, பங்ஷன் என்று சுற்றி வருவதாக கூறப்படுகிறது.
இவர்களின் காதல் சரிகாவுக்கும், கமலுக்கும் பிடிக்கவில்லை. வளரும் நேரத்தில் காதலில் விழுந்து விட்டாளே என்ற கவலை இருவருக்குமே இருக்கிறதாம். இருவரும் அக்ஷரவை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் சரிகா ஸ்ருதிஹாசன் போன்று மென்மையானவர் கிடையாது. தன்னுடைய முடிவில் யாரும் தலையிடக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர். அதனால் அவர் தன் காதலை தொடர்ந்து கொண்டிருப்பதாக மும்பை தகவல்கள் தெரிவிக்கிறது

No comments:

Post a Comment