Wednesday, 26 March 2014

லிங்குசாமி போட்ட சின்ன மீன்!

மல்லி, டெரரிஸ்ட், உருமி போன்ற படங்களை இயக்கிய ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் சர்வதேச பட விழாக்களுக்கு அனுப்பும் திட்டத்தில்தான் இனம் என்ற படத்தை இயக்கினாராம்.
இனம் படத்தை எடுக்கும்போது தமிழ்நாட்டில் அப்படத்தை வெளியிடும் எண்ணமே அவருக்கு இல்லாமல்தான் இருந்ததாம்.
இனம் படத்தை முடித்துவிட்டு அஞ்சான் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் சந்தோஷ்சிவன், அப்படத்தின் இயக்குநரான லிங்குசாமியிடம் இனம் படத்தைப் பற்றி அவரிடம் சொன்னதோடு, அப்படத்தை வருக்குத் திரையிட்டும் காட்டினாராம்.
இனம் படத்தைப் பார்த்த லிங்குசாமி, படம் சிறப்பாக இருக்கிறது. நானே தமிழ்நாட்டில் வெளியிடுகிறேன் என்று சொல்லி தானே முன் வந்து படத்தை வெளியிட்டிருக்கிறார்.
ஈழப்போராட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் இனம் படத்தை எதற்காக லிங்குசாமி வெளியிட முன் வந்தார்? என்ற கேள்வி திரைத்துறையில் பல மட்டங்களிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. லிங்குசாமியின் இந்த முடிவுக்குப் பின்னால் பலக்கும் தெரியாத காரணம் ஒன்றும் இருக்கிறது.
என்ன காரணம்?
தன் அண்ணன் மகனை கதாநாயகனாக களமிறக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் லிங்குசாமி. அந்தப் படத்தை சந்தோஷ்சிவன் இயக்கினால் தன் அண்ணன் மகனுக்கு கோலிவுட் மட்டுமின்றி மற்ற வுட்களிலும் அட்டென்ஷன் கிடைக்கும் என்பது லிங்குசாமி போட்ட கணக்கு.
அந்தக் கணக்கை நிறைவேற்றவே இனம் படத்தை வாங்கி வெளியிட்டிருக்கிறார் லிங்குசாமி. அவரது கணக்கு வொர்அவுடடாகி இருக்கிறது. யெஸ்.. சந்தோஷ்சிவன் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ லிங்குசாமியின் அண்ணன் மகன்தான்.
சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கிறது என்பது இதுதானா?

No comments:

Post a Comment