Monday, 31 March 2014

காதலிக்கிறேன் ஆனால் காதலன் யாரென்று சொல்ல மாட்டேன்! -சமந்தா

NT_140330150049000000
தெலுங்கு சினிமா வட்டாரங்களில் சித்தார்த்-சமந்தா பற்றிய காதல் செய்திகள் சில வருடங்களாகவே புகைந்து கொண்டிருக்கிறது. இதுபற்றி சித்தார்த் எதையும் வெளிப்படையாக சொல்ல மறுத்து வருகிறார்.
அப்படி தான் சொன்னால் சமந்தாவின் சினிமா கேரியர் பாதிக்கும் என்று நினைக்கிறாரோ என்னவோ, ரகசியம் காத்து வருகிறார்.
ஆனால் இந்த விசயத்தில் சமந்தா சில சமயங்களில் மனதில் உள்ளதை வெளிப்படுத்தி விடுகிறார். அப்படி அவரிடம சமீபத்தில் காதல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் காதலிப்பது உண்மைதான். ஆனால், நான் காதலிக்கும் நபரை மட்டும் இப்போதைக்கு சொல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.
அதேசமயம், எனக்கு ரொம்ப பிடித்தமானவர்கள் நடிகர் சித்தார்த் மற்றும் தெலுங்கு டைரக்டர் திரி விக்ரம்.
அதற்காக இவர்களில் ஒருவர்தான் உங்கள் காதலரா? என்று கேட்காதீர்கள்.
அதற்கு எனனிடம் பதில் இல்லை என்று கூறியுள்ள சமந்தா, இன்னும் 4 வருடங்களுக்குப் பிறகுதான் கல்யாணம் செய்து கொள்வதைப் பற்றியே யோசிப்பாராம். அதுவரைக்கும் லவ் ட்ராக் தான் ஓடிக்கொண்டிருக்குமாம்.

வாரிசுகளின் காதல்: கமல் கவலை




X
NT_140330112649000000
கமலஹாசனும், ரதியும் இணைந்து நடித்த ஏக் துஜே கேலியே 80ளில் சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்திப் படம். தமிழில் உல்லா ச பறவைகள் படத்தில் இணைந்து நடித்தனர். இப்போது இவர்களது வாரிசுகள் காதலித்து வருவதுதான் பாலிவுட்டில் லேட்டஸ்ட் பரபரப்பு
கமலஹாசனின் இளைய மகள் அக்ஷரா மும்பையில் அம்மா சரிகாவுடன் வசித்து வருகிறார். படம் இயக்கும் ஆசையில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அக்ஷரா நடிகையாகிவிட்டார். தற்போது தனுசுடன் இந்தியில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அக்ஷரா, ரதியின் மகன் தனுஜ்வில்வானியை தீவிரமாக காதலித்து வரும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தி மீடியாக்களில் இந்த செய்தி பரபரப்பாக வெளியான போதும் இதனை இருவருமே இதுவரை மறுக்கவில்லை. இருவரும் ஓட்டல், பார்ட்டி, பங்ஷன் என்று சுற்றி வருவதாக கூறப்படுகிறது.
இவர்களின் காதல் சரிகாவுக்கும், கமலுக்கும் பிடிக்கவில்லை. வளரும் நேரத்தில் காதலில் விழுந்து விட்டாளே என்ற கவலை இருவருக்குமே இருக்கிறதாம். இருவரும் அக்ஷரவை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் சரிகா ஸ்ருதிஹாசன் போன்று மென்மையானவர் கிடையாது. தன்னுடைய முடிவில் யாரும் தலையிடக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர். அதனால் அவர் தன் காதலை தொடர்ந்து கொண்டிருப்பதாக மும்பை தகவல்கள் தெரிவிக்கிறது

'ஐ' பட டிரெய்லர் எப்போது?


ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமிஜாக்சன் நடிக்கும் படம் 'ஐ'. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போகிறது. சமீபத்தில் படத்தின் புகைப்படங்கள் வெளியாகி அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும் படத்தில் விக்ரமின் கெட்டப்புகளை பற்றி நாளுக்கு நாள் வெளிவருகிற செய்திகளும் படத்தின் வெளியீட்டைப் பற்றி ஆவலை அதிகப்படுத்துகிறது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லர் ஏப்ரல் 14 அல்லது 23ல் வெளியாகப்போகிறது எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. 'ஐ' படத்தை மிக ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கும் ரசிகர்களுக்கு இந்த தகவல் கண்டிப்பாக கொண்டாட்டத்துக்கு உரியதாக இருக்கும்.

சினிமால்!


Rate this article

                       சினிமாவாகிறது ரஜினிகாந்தின் வாழ்க்கை!

கெய்க்வாட். இவரது வாழ்க்கை பற்றி புத்தகம் ஏற்கனவே வெளியாகியுள்ளது. தற்போது இவரது வாழ்க்கை இந்தி மற்றும் தமிழில் படமாகிறது.
இரு மொழிகளிலும் ஆதித்யா மேனன் ஹீரோவாக நடிக்கிறார். இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் வில்லனாக நடித்துக்கொண்டிருப்பவர். தமிழில் வில்லு, பில்லா, அசல், சிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பஸ் கண்டக்டராக இருந்து பின் சினிமாவிற்குள் நுழைந்தது, சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தது, ஆன்மீகத்தில் ஈடுபாடுகாட்டியது என ரஜினியின் வாழ்க்கை மொத்தமும் பதிவு செய்யப்பட இருக்கிரதாம்.
ரஜினி வேடத்தில் நடிப்பது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என கூறியிருக்கிறார் இப்படத்தின் ஹீரோ ஆதித்யா மேனன்.
இப்படத்திற்கு ஹிந்தியில் 'மை ஹோ ரஜினிகாந்த்' என்றும், தமிழில் 'நானே ரஜினிகாந்த்' என்றும் தலைப்பிடப்பட்டுள்ளதாம். படத்தினை ஃபைசல் பை என்பவர் இயக்குகிறார், வர்ஷா புரொடக்‌ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தணிக்கைக்குழு நெருக்கடி! குழப்பத்தில் விஷால்!

விஷால், லட்சுமி மேனன், இனியா, சுந்தர், ஜெகன் நடிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் 'நான் சிகப்பு மனிதன்'. இப்படம் ஏப்ரல் 11ம் தேதி திரைக்குவருகிறது.
இந்த சமயத்தில் படத்திற்கு சிக்கல் வந்துள்ளது. தணிக்கைக் குழுவினர் படத்தைப் பார்த்துவிட்டு, படத்தில் வரும் முத்தக் காட்சியை நீக்கும்படி சொல்லியிருக்கிறது.
அது படத்திற்கு முக்கியமான காட்சி என விஷால் தரப்பு கூற, முத்தக்கட்சியை நீக்கினால் தான் 'யூ' சான்றிதழ் வழங்குவோம் இல்லை எனில் 'யூ/ஏ' சான்றிதழ் தான் வழங்கப்படும் எனத் தணிக்கைக்குழு  தெரிவித்திருக்கிறது.
முத்தக்காட்சியை நீக்கிவிட்டு 'யூ' சான்றிதழ் பெறுவதா, இல்லை நீக்காமல் 'யூ/ஏ' சான்றிதழ் பெற்றுக்கொள்வதா என குழப்பத்தில் இருக்கிறதாம் விஷால் தரப்பு.

விபசாரத்திற்கு அழைப்பு விடுத்த நடிகை ரகசிய கேமராவில் சிக்கிய காட்சி!. - நாடு உருப்புடுமா ?






Saturday, 29 March 2014

அஜீத்துக்கு ஜோடியாகும் அனுஷ்கா-எமிஜாக்சன்!



Anushka-Amy-Jackson-in-Vijay-film

கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் விரைவில் தொடங்கயிருக்கிறது. ஆனால், அப்படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டதில் இருந்தே சில முன்னணி நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வந்தார் கெளதம்.
ஆனால் அவர் எதிர்பார்த்த நடிகைகளை விட, எதிர்பார்க்காத த்ரிஷா உள்ளிட்ட சில நடிகைகளே கால்சீட் கொடுக்க நான் நீ என்று முட்டி மோதிக்கொண்டிருந்தார்கள்.
இதனால், த்ரிஷா தனது விண்ணைத்தாண்டி வருவாயா ஹிட் படத்தில் நடித்தவர் என்பதால் செண்டிமென்ட் கருதி அவரை இரண்டில் ஒரு கதாநாயகியாக்க நினைத்தார். ஆனால், அஜீத்துடன் அவர் நடித்த ஜீ, கிரீடம் என இரண்டு படங்கள் தோல்வியடைந்த செண்டிமென்டும் இருப்பதால், இந்தமுறை ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று த்ரிஷாவை தள்ளி வைத்துவிட்டார்.
அதற்கடுத்துதான், அஜீத்துடன் இதுவரை ஜோடி சேராத நடிகைகளாக பட்டியலிட்ட கெளதம்மேனன், அனுஷ்காவிடம் பேசினார். அஜீத் படம் என்பதால் தெலுங்கில் பிசியாக நடித்து வந்தபோதும், எப்படியாவது கால்சீட் தந்து விடுகிறேன் என்று நம்பிக்கை வாக்குறுதி அளித்தார்.
அதனால், ஒரு கதாநாயகி ஓ.கே, அடுத்து இன்னொரு நாயகியாக யாரை கமிட் பண்ணலாம் என்று பாலிவுட் பக்கம் அலைந்து திரிந்து கொண்டிருந்தார் கெளதம்.
ஆனால், இப்போது அஜீத் தரப்பே முன்வந்து, எதற்கு பாலிவுட் நடிகை, அதான் ஐ படத்தில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகை எமிஜாக்சன் இருக்கிறாரே என்று கெளதமுக்கு எடுத்துக்கொடுத்துள்ளனர்.
அதனால், என்ன சம்பளம் கேட்டாலும் கொடுத்து எமியை புக் பண்ணி விடுவது என்று அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் கெளதம்மேனன். ஆக, தாண்டவம் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்த அனுஷ்கா-எமி ஜாக்சன் ஆகிய இருவரும் மீண்டும் அஜீத்துடன் இணைகின்றனர்.

கிளாமர் கதவுகளை ஓப்பன் செய்த லட்சுமிமேனன்! மார்ச் 28, 2014 | தமிழ் சினிமா



X

Naan (3)கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று எந்த டைரக்டர் லட்சுமிமேனனைப்பார்த்து சொன்னாலும், கோபக்கனல் பறக்க அவர்களைப்பார்த்து கண்களை உருட்டுவார்.
அதில் தெரியும் ஆவேசம் டைரக்டர்களை அடுத்த வார்த்தை பேச விடாமல் செய்து விடும். அந்த அளவுக்கு கவர்ச்சிக்கு தான் ஜென்ம எதிரி போன்று தன்னை வெளிப்படுத்தி வந்தார் லட்சுமிமேனன்.
ஆனால், தற்போது விஷாலுடன் நடித்துள்ள நான் சிகப்பு மனிதன் படத்தில், இன்னொரு நாயகியாக நடிக்கும் இனியாவின் கவர்ச்சி தாக்கம் அதிகமாக இருப்பதால், தன்னை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக, கவர்ச்சிக்கதவுகளை ஓப்பன் பண்ணி விட்டிருக்கிறார் லட்சுமிமேனன்.
அதன் எதிரொலியாக பாண்டியநாடு படத்தை விடவும் விஷாலுடன் ஓவர் நெருக்கம் காட்டியிருப்பவர், படம் முழுக்க மாடர்ன் காஸ்டியூமில் கலக்கியிருக்கிறாராம்.
அதோடு, விஷாலுடன் ஒரு காட்சியில் தண்ணீருக்கு அடியில் முங்குவது போன்று ஒரு செமத்தியான காட்சி உள்ளதாம். அதில் லட்சுமிமேனனின் கட்டுப்பாட்டையும் மீறி அவரது கவர்ச்சி வெளிப்பட்டுள்ளதாம்.
இந்த செய்தி கோலிவுட்டில் வேகமாக கசிந்ததையடுத்து, லட்சுமிமேனனும் கவர்ச்சி கட்சியில் சேர்ந்து விட்டார் என்று, அவரை மனதில் கொண்டு கதை பண்ணியிருக்கும் இயக்குனர்கள், இப்போது சில கிளாமர் காட்சிகளையும் எக்ஸ்ட்ராவாக ஸ்கிரிப்டில் இணைத்து வருகிறார்கள்.

பேஸ்புக்கின் மகராணி ஆனார் தீபிகா படுகோனே! மார்ச் 28, 2014 | தமிழ் சினிமா



Deepika-Padukone-1
பாலிவுட் நட்சத்திரங்களில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இயங்கிக் கொண்டிருப்பவர் தீபிகா படுகோனே. இப்போது அவர் அமிதாப்பச்சான், ஷாருக்கான், சல்மான்கானை பின்னுக்கு தள்ளிவிட்டு யாரும் தொட முடியாத உயரத்தில் இருக்கிறார். சமீபத்தில் அவர் 15 மில்லியன் (ஒன்றரை கோடி) லைக்குளை தாண்டினார்.
கடந்த ஆண்டு தீபிகா படுகோனே நடித்த மூன்று படங்களும் ஹிட்டானதைத் தொடர்ந்து அவரது பேஸ்புக்கிற்கு லைக்குள் குவிந்து இருக்கிறது.
கோச்சடையான் பாடல் மற்றும் டிரைய்லர் வெளியீட்டிற்கு பிறகு தீபிகாவின் பேஸ்புக்கில் லைக்குள் மழையாக கொட்டத் தொடங்கி விட்டது. மற்ற இந்தி நட்சத்திரங்கள் பத்து மில்லியனுக்கும் குறைவான லைக்குகளை பெற்று மிகவும் பின்தங்கி இருக்கின்றனர்.
தீபிகா தன் பேஸ்புக்கில் ஒரு மணிக்கு ஒரு முறை அப்டேட் செய்து கொண்டிருப்பதும் இதற்கு காரணம் என்கிறார்கள். இதன் மூலம் தீபிகா பேஸ்புக்கின் ராணியாக வர்ணிக்கப்படுகிறார். 20 கோடி சம்பளம் வாங்கி அதிலும் முன்னணியில் இருக்கிறார்.

நீங்கள் விரும்பக்கூடியவை...

குக்கூவை நான் முதல் படமாக இயக்க காரணமே டைரக்டர் ஷங்கர்தான்! – ராஜூமுருகன்


mqdefault
குக்கூ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருப்பவர் ராஜூமுருகன். முதல் படத்திலேயே மாற்றத்திறனாளிகளின் காதலை படமாக்கி தான் ஒரு மாறுபட்ட இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார். அதனால், தற்போது கோடம்பாக்கம் எங்கும் ராஜூமுருகனைப்பற்றிய பேச்சுதான் அடிபடுகிறது.
ஆனால், இப்படி அவர் மாறுபட்ட இயக்குனராக அறிமுகமானதற்கு முக்கிய காரணமே பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்தானாம்.
அவரது தயாரிப்பில் தனக்கு படம் இயக்க சான்ஸ் கேட்டு ராஜூமுருகன் சென்றபோது, குக்கூ கதையையும் சொன்னவர், இன்னொரு கதையையும் சொல்லி அதைத்தான் முதல் படமாக இயக்கப்போவதாக சொன்னாராம்.
ஆனால், டைரக்டர் ஷங்கரோ, முதல் படத்தில் உங்களுக்கென்று ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும். அதனால் மாற்றுத்திறனாளிகளின் கதையை படமாக்குங்கள்.
அது பெரிய இடத்தை பெற்றுத்தரும் என்றாராம். அப்படி சொன்ன ஷங்கரால், அந்த கதையை தயாரிக்க முடியவில்லையாம். அதனால் அதையடுத்து வேறு தயாரிப்பாளரிடம் அந்த கதையை சொல்லி ஓ.கே பண்ணி இப்போது படத்தையும் ஹிட்டாக கொடுத்துவிட்டார் ராஜூமுருகன்.
இந்த தகவலை சொல்லும் அவர், இந்த குக்கூ எனது கதையாக இருந்தாலும் நான் முதல் படமாக இயக்கியதற்கு முழுக்காரணம் ஷங்கர் சார்தான் என்கிறார் ராஜூமுருகன்.

தெனாலிராமன் படத்தில் வடிவேலு பேசும் வில்லங்கமான வசனம்!

Vadivelu-In-Jagajala-Pujabala-Thenaliraman-7
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததினால், திரையுலகினரால் புறக்கணிக்கப்பட்ட வடிவேலு, சுமார் 3 வருட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் படம் – தெனாலிராமன். இந்தப்படத்தின் கதைப்படி வடிவேலுவுக்கு 36 மனைவிகள், 52 வாரிசுகள். 53 வது வாரிசு பிறக்கும்போது ஏற்படும் பிரச்சனைகள்தான் தெனாலிராமன் படத்தின் கதை.
தெனாலிராமன் என்ற டைட்டில் ரோலில் மட்டுமின்றி மதியூகியான மற்றொரு கேரக்டரிலும் நடித்திருக்கிறார் வடிவேலு. தெனாலிராமன் படத்தில் தன் வழக்கமான பாணியில் காமெடி வசனங்களில் பிச்சு உதறி இருக்கும் வடிவேலு, நாசூக்காக ஒரு வசனத்தையும் படத்தில் வைத்திருக்கிறார்.
அதாவது கடந்த 3 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார் அல்லவா? அதற்கான காரணத்தை ரசிகர்களுக்குச் சொல்வதுபோல் அந்த வசனம் அமைந்திருக்கிறது.
என்ன வசனம்? ஒருவனின் லட்சியம் நிறைவேறும்வரை மறைவாக இருப்பதுதான் நல்லது. இது உலகின் அனைத்துப்போராளிகளுக்கும் பொருந்தும். என்பதே அந்த வசனம்.
அப்படீன்னா வடிவேலு போராளியா? வில்லங்கமான வசனமா இருக்கே வைகைப்புயல்?

Thursday, 27 March 2014

நடிகர் நடிகைகள் காம கூத்து -மடக்கி பிடித்த கமராக்கள் -


சந்தோஷ் சிவனின் இனம் வெளியாவதில் சிக்கல்…!



Inam-Movie-Stillsதமிழர்களுக்கு எதிராக இனம் படம் எடுக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, சந்தோஷ் சிவனின் இனம் படம் வெளியாவதில் சிக்கல் உருவாகியுள்ளது.
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், இயக்கி இருக்கும் படம் இனம். இப்படத்தில் சரிதா, கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வெளியிடுகிறது. நாளை(மார்ச் 28ம் தேதி) இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் இனம் படத்தின் ப்ரீமியர் ஷோ சென்னையில் நடந்தது. திரையுலகைச் சேர்ந்த வி.ஐ.பி.க்களுக்காக திரையிடப்பட்ட அந்த ப்ரிமியர் ஷோவில் இயக்குநர் வ.கவுதமன் உள்ளிட்ட தமிழ்இன உணர்வாளர்கள் சிலரும் படத்தைப் பார்த்திருக்கின்றனர்.
இனம் படம் முழுக்க முழுக்க தமிழ் மக்களுக்கு எதிரானதாக எடுக்கப்பட்டிருப்பதாக அப்போது படம் பார்த்த பலர் கூறியிருந்தனர்.
இந்நிலையில், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் கொளத்தூர் மணி, சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு புகார் அளித்துள்ளார்.
அதில் இனம் படம் தமிழர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் அப்படத்தை வெளியிடக்கூடாது என்றும், இப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்றும், படத்தை மீறி திரையிட்டால் தியேட்டர் முன்பு ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று தனது புகாரில் கூறியிருக்கிறார்.

இதனிடையே இப்பிரச்னை தொடர்பாக இயக்குநர் சங்கத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய இயக்குநர் சங்க உறுப்பினர்கள், தமிழ் உணர்வு எங்களுக்கும் இருக்கிறது, தமிழ்ர்களுக்கு எங்கெல்லாம் பிரச்னை இருக்கிறதோ, அங்கெல்லாம் முதலில் குரல் கொடுப்பது இயக்குநர் சங்கம் தான். கர்நாடக தண்ணீர் பிரச்னை தொடர்பாக நெய்வேலி வரை போராட்டம் செய்தோம்.
இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக ராமேஸ்வரம் சென்று போராட்டாம் செய்தோம். இந்தப்படத்தில் இலங்கை தமிழர்களுக்கு எதிரான காட்சிகள் எதுவும் கிடையாது. தமிழ் இனத்திற்கான படம் தான் இனம். சென்சார் போர்டு வரிவிலக்கு செய்தபோதும் ஒருபடத்தை தடை செய்கிறார்கள் என்றால் அவர்கள் படத்தை பார்க்க வாய்ப்பில்லை.
இந்தப்படத்தை எடுத்தது, தயாரித்தது சங்க உறுப்பினர்கள், இவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை. இதுமாதிரி தடை கொடுத்தார்கள் என்றால் படைப்பாளியின் சுதந்திரம் பறிக்கப்படும். படங்களுக்கு தடை விதிப்பது விஸ்வரூபம் மாதிரி தொடர் கதையாகிவிடக்கூடாது.
இந்தப்படம் உலகம் முழுவதும் போய் சேருகின்ற படம். அதனால் இப்படத்தை தடை செய்யாமல், படத்தை ரிலீஸ் செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர்கள் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் இன உணர்வாளர்களின் எதிர்ப்பு, கொளத்தூர் மணியின் போலீஸ் புகார் போன்ற காரணங்களால் இனம் படம் நாளை வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

4 நாட்களில் 5.7 கோடி வசூலித்த குக்கூ!


16cp_Cuckoo_movie__1785670gமாற்றுத்திறனாளிகளின் காதலையும், பிரச்னைகளையும் உணர்வு ரீதியாக எடுக்கப்பட்ட படம்தான் குக்கூ. பத்திரிகையாளர் ராஜூமுருகன் இயக்கியுள்ள இப்படம் சிறிய படமாக இருந்தாலும், ரசிகர்களின் பேராதரவினால் தற்போது பெரிய படமாகி விட்டது. அதனால் திரையிடப்பட்ட அனைத்து ஊர்களிலும் தற்போது வசூல் சாதனை நிகழ்த்தி வருவதாக கூறுகிறார்கள்.
இதுபற்றி அப்படத்தின் தயாரிப்பாளர் கூறும்போது, ஒவ்வொரு நாளும் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில், குக்கூ படம் திரையிடப்பட்ட 205 தியேட்டர்களில் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நான்கு நாட்கள் மட்டும் 5.7 கோடி வசூலாகியிருக்கிறது.
பாக்ஸ் ஆபீஸ் நிலவரப்படி, இதற்கு முன்பு வெளியான எங்கேயும் எப்போதும், ராஜா ராணி படங்களுக்கு அடுத்த இடத்தை தற்போது குக்கூ பிடித்துள்ளது. மேலும், ஒவ்வொரு நாளும் கலெக்சன் அதிகரித்துக்கொண்டே வருவதால், பல முந்தைய சாதனைகளை இப்படம் முறியடித்து விடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்கிறார்.

அதர்வாவுடன் பலப்பரீட்சை பார்க்க தயாராகும் லட்சுமிராய்!

காஞ்சனா படத்திற்கு பிறகு ஒன்பதுல குரு படத்தில் நடித்த லட்சுமிராய்க்கு அதையடுத்து கோடம்பாக்கம் கைகொடுக்கவில்லை. அதனால் கன்னடம், இந்தி என்று படவாய்ப்புகளுக்காக படையெடுத்தவர், அங்கு தன்னை யாரும் கண்டு கொள்ளாததால் மறுபடியும் கோலிவுட் கோதாவில் குதித்திருக்கிறார்.

NT_140327104132000000
சில படங்களில் இடம்பிடிக்க படுபயங்கரமாக களமிறங்கிய லட்சுமிராய் புது வரவு நடிகைகளின் அதிரடியினால் தோற்றுக்கொண்டேயிருந்தவர், இப்போது அதர்வா நடிக்கும் இரும்புக்குதிரை படத்தை கைப்பற்றி விட்டார்.
இப்படத்தில் நாயகி வேடத்துக்காகத்தான் முதலில் முண்டியடித்தார் லட்சுமிராய். ஆனால், அதர்வாவுக்கு முன்னாடி அவரை நிறுத்தினால் அக்கா மாதிரி இருப்பார் என்பதால் அதற்கு யாரும் உடன்படவில்லை. அதனால் அந்த வேடம் ப்ரியாஆனந்துக்கு எளிதாக கிடைத்து விட்டது.
அதனால், அதே படத்தில் இன்னொரு வில்லி வேடம் உள்ளது என்று டைரக்டர் சொன்னபோது, அந்த ரோல் பற்றி கேட்ட லட்சுமிராய், அதுவும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம் என்பதால் உடனே ஒத்துக்கொண்டார்.
மேலும், பைக் ரேஸை மையமாகக்கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தில் பைக் ரேஸராக நடிக்கும் அதர்வாவுக்கு போட்டியாக லட்சுமிராயும் குதிக்கிறாராம். இதற்காக சரியான ட்ரெய்னரை வைத்து 2 வாரங்களாக முறையாக பயிற்சி பெற்று வரும் லட்சுமிராய், விரைவில் பைக் ரேஸ் காட்சிகளில் நடிக்கப்போகிறாராம்.

ஆர்யா-அமலாபால் திடீர் திருமணம்!

மார்ச் 27, 2014 | தமிழ் சினிமா | Tags:

BjkJkv-CUAEYByk














                           NEXT IMAGES    SAMANTHA HOT GALLERY CLICK HERE   

அட்லி இயக்கத்தில் ஆர்யா-நயன்தாரா நடித்த படம் ராஜா ராணி. இந்த படம் திரைக்கு வர இருந்த நேரத்தில் பரபரப்பு கூட்ட வேண்டும் என்பதற்காகவே, ஆர்யா-நயன்தாராவுக்கு திருமணம் நடக்கவிருப்பது போன்று அழைப்பிதழை வெளியிட்டு பெரும் பரபரப்பு கூட்டினர்.
அந்த சமயத்தில் ஆர்யா-நயன்தாராவைப் பற்றிய காதல் கிசுகிசுக்களும் உச்சகட்டத்தில் இருந்ததால் அது நிஜ திருமணத்திற்கான அழைப்பிதழ் போலவே இருந்தது.
ஆனால், அதையடுத்து ராஜா ராணியில் அப்படியொரு காட்சி இடம்பெறுகிறது என்று செய்தி வெளியிட்டு அந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அதேப்போல், சமீபத்தில் இது நம்ம ஆளு படத்திலும் சிம்பு- நயன்தாராவின் கழுத்தில் தாலி கட்டியது போன்று ஒரு பப்ளிசிட்டியை முடுக்கி விட்டார் பாண்டிராஜ்.
இந்தநிலையில், பார்த்திபன் இயக்கி வரும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திற்காகவும் ஆர்யா- அமலாபால் திருமணம் நடப்பது போன்று ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது. கோவையில் நடந்த இந்த திருமண காட்சியையே படம் திரைக்கு வரும் நேரத்தில் பப்ளிசிட்டி செய்யவும் திட்டமிட்டுள்ளாராம் பார்த்திபன்.
முற்றிலும் புதுமுகங்களே நடிக்கும் இப்படத்தில், தனுஷ், ஆர்யா, பிரகாஷ்ராஜ், அமலாபால், நஸ்ரியா ஆகியோர் நட்புக்காக நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஏப்ரல் 11-ந்தேதி களமிறங்கும் விஷால்-வடிவேலு! மார்ச் 27, 2014 | தமிழ் சினிமா


vishal-to-clash-with-vadivelu-700x457வருகிற ஏப்ரல் 11-ந்தேதி ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படம் திரைக்கு வரயிருப்பதாக பல மாதங்களாக செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன.
அதோடு, அபபடத்தின் ஆடியோவும வெளியிடப்பட்டு விட்டதால், ரசிகர்களும் அந்த தேதியில் படம் திரைக்கு வந்து விடும் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால், தற்போது வெளியாகும் செய்திகளைப்பார்த்தால், கோச்சடையான் மே மாதம்தான் திரைக்கு வருவார் எனறு தெரிகிறது.
ஆனால், ரஜினி படம் வெளிவந்தாலும் அதே நாளில் எங்கள் படமும் திரைக்கு வரும் என்று அப்போதே வரிந்து கட்டிய நான் சிகப்பு மனிதன் பட நாயகன் விஷாலும், ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் பட நாயகன் வடிவேலுவும் சொன்னபடியே ஏப்ரல் 11-ந்தேதி தங்கள் படங்களை வெளியிட்டு போட்டிக்கோதாவில் குதிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.
மேலும், ரஜினி படம் திரைக்கு வருகிறது என்பதால், ஏப்ரலில் வெளியாகயிருந்த சில படங்களின் தேதிகள் மாற்றப்பட்டு விட்டதால், இப்போது ஏப்ரல்11-ந்தேதி விஷாலும், வடிவேலு மட்டுமே நேருக்குநேர் மோதிக்கொள்ளும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

குக்கூ இயக்குநருக்கு சொகுசு கார் பரிசளித்த தயாரிப்பாளர்


மார்ச் 27, 2014 | தமிழ் சினிமா


X
NT_140327095854000000
ராஜுமுருகன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்த குக்கூ கடந்த வாரம் வெளியானது. பார்வையற்றவர்களின் வாழ்வியலைச் சொன்ன குக்கூ படத்துக்கு ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸ்.
படம் பார்த்த அனைவருமே சிறந்த படம் என்று பாராட்டத்தவறவில்லை. அதேநேரம் திரையுலகில் வேறு மாதிரியான தகவல்கள் அடிபட்டன.
அதாவது குக்கூ படத்துக்கு நல்ல ரிசல்ட் கிடைத்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை என்பதே அந்தத் தகவல்.
இந்நிலையில் குக்கூ படத்தின் படக்குழுவினர் மீடியாக்களை அழைத்து சக்ஸஸ்மீட் நடத்தினார்கள். அப்போது பேசிய படத்தின் தயாரிப்பாளரான ஆடிட்டர் சண்முகம், குக்கூ படம் மிகப்பெரிய வெற்றியடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.
வெற்றிப்படம் கொடுத்த இயக்குநர் ராஜுமுருகனுக்கு டஸ்ட்டர் காரையும் பரிசளித்தார்.
அதுமட்டுமல்ல, குக்கூ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராஜுமுருகனுக்கு அடுத்தப்பட வாய்ப்பும் வழங்கி இருப்பதாகத் தெரிவித்தார்.
படம் ஜெயிக்கலைன்னா இதெல்லாம் கொடுப்பாங்களா? அப்படீன்னா.. குக்கூ..ஹிட்டுதான் போலிருக்கிறது!

SAMANTHA HOT PHOTO GALLERY

Wednesday, 26 March 2014

சினிமாவில் நடிக்க மாட்டேன்: குக்கூ மாளவிகா அதிரடி

சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கும் படம் குக்கூ. பத்திரிகையாளர் ராஜுமுருகன் இயக்கி உள்ள இந்தப் படம் பார்வையற்றவர்களின் காதலை மையமாக கொண்டது.
இதில் பார்வையற்ற பெண்ணாக நடித்திருக்கும் மாளவிகாவின் நடிப்பை எல்லோரும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மாளவிகாகவோ இனி நடிக்க மாட்டேன், பைலட் ஆக போகிறேன் என்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: “எனக்கு சினிமால நடிக்கணும்னு ஆசையே கிடையாது விமான பைலட் ஆகணுங்கறதுதான் என்னோட லட்சியம். இப்போது பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன்.
சும்மா ஒரு ஹாபிக்காக நடிக்க வந்தேன். ராஜு முருகன் சார் கதை சொன்னதும் ஒரு சேலன்ஞ்சுக்காக நடிக்க ஆரம்பிச்சேன். இனி நடிக்கும் உத்தேசம் இல்லை.
ஜெர்மனியில் கமர்ஷியல் பைலட் படிப்புக்கு அப்ளை பண்ணியிருக்கேன். கிடைச்சதும் போய்விடுவேன். இடையில எனக்கு கேப் கிடைக்கும்போது குக்கூ மாதிரி சவாலான கேரக்டர் எதுவும் கிடைத்தால் நடிப்பதை பற்றி யோசிக்கலாம்” என்கிறார் மாளவிகா.
குக்கூவில் மாளவிகாவின் நடிப்பை பார்த்து விட்டு பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அவரது முகவரியை தேடி அலைந்து கொண்டிருக்கும்போது மாளவிகாவின் இந்த முடிவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
ஆனாலும் மலையாள ஹீரோயின்களின் ஜாதகப்படி முதல்ல இப்படித்தான் சொல்வாங்க. அப்புறம் நடிக்க ஆரம்பிச்சிடுவாங்க. அசின் அறிமுகமானபோது “நான் சொந்தமாக எஸ்டேட் வச்சிருக்கேன் சும்மா நடிக்க வந்தேன்.
பெரிய பிசினஸ் உமனாகணுங்றது என் லட்சியம்”னு சொன்னார். அப்புறம் நடந்தது எல்லோருக்கும் தெரியும். சமீபத்தில் அறிமுகமான லட்சுமி மேனன். கும்கிக்கு பிறகு நடிக்க மாட்டேன் எனக்கு படிப்புதான் முக்கியமென்றார்.
இன்றைக்கு அதிக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மாளவிகா விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

நீச்சல் உடை கோலத்தை இணையதளத்தில் வெளியிடுவதா? போலீசில் புகார் செய்த சார்மி!!

சிம்புவுடன் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்தவர் சார்மி. அதன்பிறகு ஆஹா எத்தனை அழகு உள்பட சில படங்களில் நடித்தவர், தாய்மொழியான தெலுங்கு சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டே வந்தார்.
சில படங்களில் சார்மியின் கவர்ச்சிகரமான நடிப்பு இளவட்ட நடிகைகளையே அதிர வைத்தது. அந்த அளவுக்கு துக்கடா உடையணிந்து கலக்கி எடுத்தார் சார்மி.
இருப்பினும் தற்போது அவருக்கு வயதாகி விட்டதால் அவரது கவர்ச்சிக்கு மவுசு குறைந்து விட்டது. அதனால் குத்துப்பாட்டு நடிகையாக உருவெடுத்தபோதும் சார்மியால் மார்க்கெட்டில் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
அதனால், இதுவரை தனது காதலரான இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துடன் இலைமறை காய்மறையாக மட்டுமே பழகி வந்த சார்மி. தற்போது வெளிப்படையாகவே அவருடன் ஊர் சுற்றத் தொடங்கியிருக்கிறார்.
அப்படி ஜாலி டூர் அடிக்கும்போது சினிமாவில் தான் காத்தாட நடித்தது போன்று நீச்சல் உடையணிந்து, காதலரோடு இன்ப நீராடுகிறாராம் நடிகை.
ஆனால் அப்படி அவர்கள் கவர்ச்சிக்குளியல் போடுவதை யாரோ படம் பிடித்து இணையதளங்களிலும் வெளியிட்டு பப்ளிக் சேவை செய்து விட்டார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்த சார்மி, இதுகுறித்து ஆந்திர போலீசில் புகார் செய்து விட்டாராம்.
சார்மியின் புகார் எதிரொலியாக அவரது நீச்சல் உடை படங்களை இணையதளங்களில் வெளியிட்டவர்கள், உடனடியாக நீக்கி விட்டார்களாம். இதனால் இந்த பிரச்னையை இத்தோடு விட்டு விடுங்கள் என்று விசயத்தை கமுக்கமாக முடித்துக்கொண்டுள்ளாராம் சார்மி.

லிங்குசாமி போட்ட சின்ன மீன்!

மல்லி, டெரரிஸ்ட், உருமி போன்ற படங்களை இயக்கிய ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் சர்வதேச பட விழாக்களுக்கு அனுப்பும் திட்டத்தில்தான் இனம் என்ற படத்தை இயக்கினாராம்.
இனம் படத்தை எடுக்கும்போது தமிழ்நாட்டில் அப்படத்தை வெளியிடும் எண்ணமே அவருக்கு இல்லாமல்தான் இருந்ததாம்.
இனம் படத்தை முடித்துவிட்டு அஞ்சான் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் சந்தோஷ்சிவன், அப்படத்தின் இயக்குநரான லிங்குசாமியிடம் இனம் படத்தைப் பற்றி அவரிடம் சொன்னதோடு, அப்படத்தை வருக்குத் திரையிட்டும் காட்டினாராம்.
இனம் படத்தைப் பார்த்த லிங்குசாமி, படம் சிறப்பாக இருக்கிறது. நானே தமிழ்நாட்டில் வெளியிடுகிறேன் என்று சொல்லி தானே முன் வந்து படத்தை வெளியிட்டிருக்கிறார்.
ஈழப்போராட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் இனம் படத்தை எதற்காக லிங்குசாமி வெளியிட முன் வந்தார்? என்ற கேள்வி திரைத்துறையில் பல மட்டங்களிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. லிங்குசாமியின் இந்த முடிவுக்குப் பின்னால் பலக்கும் தெரியாத காரணம் ஒன்றும் இருக்கிறது.
என்ன காரணம்?
தன் அண்ணன் மகனை கதாநாயகனாக களமிறக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் லிங்குசாமி. அந்தப் படத்தை சந்தோஷ்சிவன் இயக்கினால் தன் அண்ணன் மகனுக்கு கோலிவுட் மட்டுமின்றி மற்ற வுட்களிலும் அட்டென்ஷன் கிடைக்கும் என்பது லிங்குசாமி போட்ட கணக்கு.
அந்தக் கணக்கை நிறைவேற்றவே இனம் படத்தை வாங்கி வெளியிட்டிருக்கிறார் லிங்குசாமி. அவரது கணக்கு வொர்அவுடடாகி இருக்கிறது. யெஸ்.. சந்தோஷ்சிவன் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ லிங்குசாமியின் அண்ணன் மகன்தான்.
சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கிறது என்பது இதுதானா?

சந்தானம் வேண்டவே வேண்டாம்! உறுதியாக சொன்ன கார்த்தி!

Do not Santhanam! Karthik said sure!
கார்த்தி நடித்த சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன் உள்பட சில படங்களில் அவருடன் இணைந்து காமெடியனாக நடித்திருந்தார் சந்தானம். ஆனால் இடையினில் என்ன நடந்ததோ இப்போது தனது படங்களுக்கு சந்தானம் வேண்டவே வேண்டாம் என்று கண்டிசனாக சொல்கிறாராம் கார்த்தி.
அதேபோல், சிங்கம்-2 படத்தில் முக்கிய காமெடியன் ஒருவர் இருந்தாலும், மார்க்கெட்டை கருத்தில் கொண்டு சந்தானத்தையும் கதைக்குள் திணித்திருக்கிறார் டைரக்டர் ஹரி. இதையடுத்து, தான் கார்த்தியை வைத்து இயக்கும் அருவா படத்திலும் சந்தானத்தை நடிக்க வைக்கும் முடிவில் இருந்தார் ஹரி. ஆனால் கார்த்தி குறுக்கிட்டு, எக்காரணம் கொண்டு சந்தானம் வேண்டாம். வேறு யாராவது காமெடியனை போடுங்கள் என்று கூறி விட்டாராம். இதனால் சந்தானத்தை பரிசீலனையில் வைத்துள்ளாராம் ஹரி.
ஆனால் இதுபற்றி, சந்தானத்தின் மீது கார்த்திக்கு அப்படி என்னதான் கோபம்? என்று விசாரித்தால், அவர் மீது எந்த கோபமும் இல்லை. எப்போதும் போல் அவர்கள் நண்பர்களாகத்தான் உள்ளார்கள். தொடர்ந்து இருவரும் இணைந்து காமெடி செய்தால் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரே மாதிரியாகவே தெரியும் என்பதால்தான், அவருடன் தொடர்ந்து நடிப்பதை தவிர்க்கிறார் கார்த்தி என்கிறார்கள். 

Thala 55' gets one out of its two deadly baddies Mar 26, 2014


Gautham Menon's films are always known for their splendid camera work. Right from his first film to his recent ones, the cameramen who have worked on his films such as Ravi Varman, R.D.Rajasekhar and Manoj Paramahamsa to name a few, have gone on to rake in a lot of accolades for their work. 
 
For Gautham's upcoming film with Ajith (Thala 55), the cinematographers who are under consideration are Dan MacArthur and S.R.Kathir. The final choice hasn't been made yet and we have to wait for an official confirmation. Dan is already working in the Gautham-Simbu film which is under production, while S.R.Kathir was noted for his work in Kattradhu Thamizh, Subramaniapuram and many more films.
 
Regarding the casting for this film, we hear that there will be two villains in the movie, out of which one has already been cast while discussions regarding the casting for the other villain's role are happening. 
 
We will keep you posted with more updates on 'Thala 55' in the coming days. 

இரட்டை வேடங்களில் அஜித்?


கௌதம் மேனன் இயக்கும் அஜித் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி வருகிறது. அஜித் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார். இதற்காக எட்டு கிலோ எடையைக் குறைத்து கொஞ்சம் ஸ்லிம் ஆகி இருக்கிறார்.
சிக்ஸ் பேக் போல எய்ட் பேக்கில் அசத்தப் போகிறார் அஜித். ஏற்கனவே 'ஆஞ்சநேயா', 'கிரீடம்' படங்களில் அஜித் போலீஸாக நடித்திருக்கிறார்.
ஆனால், அந்தப் படங்களில் இல்லாத ஸ்டைல், லுக், கம்பீரம் கௌதம் மேனன் படத்தில் இருக்குமாம்.
அஜித் இதில் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்கப் போகிறாராம். 'வாலி', 'வில்லன்', 'அட்டகாசம்', 'அசல்' போன்ற படங்களில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதால் விறுவிறுப்பாக சுறுசுறுப்பாக படத்தை முடிக்க வேண்டும் என்று கௌதம் மேனன்  தீவிரமாக இயங்க ஆரம்பித்துவிட்டார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் - 2?

வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் வருவது தற்போது அதிகரித்துள்ளது. 'சிங்கம்-2', 'பீட்சா-2' வில் ஆரம்பித்தது 'விஸ்வரூபம்-2', 'ஜெய்ஹிந்த்-2' என இரண்டாம் பாகங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
தற்போது ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா நடித்து வெளியான 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதில் ஆர்யா, நயன்தாராவுடன் தமன்னாவும் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்து வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகவிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கவில்லையாம், அவருக்கு பதிலாக ஆண்ட்ரியா அல்லது ப்ரியா ஆனந்த் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.
ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ரஜினி - நான் சிகப்பு மனிதன் டீம் சந்திப்பு ஆல்பம் ரஜினி - நான் சிகப்பு மனிதன் டீம் சந்திப்பு ஆல்பம் ரஜினி - நான் சிகப்பு மனிதன் டீம் சந்திப்பு ஆல்பம் ரஜினி - நான் சிகப்பு மனிதன் டீம் சந்திப்பு ஆல்பம் ரஜினி - நான் சிகப்பு மனிதன் டீம் சந்திப்பு ஆல்பம் ரஜினி - நான் சிகப்பு மனிதன் டீம் சந்திப்பு ஆல்பம்

ரஜினி - நான் சிகப்பு மனிதன் டீம் சந்திப்பு ஆல்பம்